Friday 28 March 2014

லவ்வர்ஸ் ( பாதி உண்மை )

                 என் பேரு ரகுநாதன்.நான் இப்ப வந்திருக்கிறது வெள்ளியங்கிரி மலையடிவாரத்துல இருக்கிற தியான மையத்துக்கு.கொஞ்சம் மனசு சரியில்லாதப்ப எல்லாம் இப்படி வருவேன்...எப்போ மனசு சரியில்லாம போகும்ன்னா வீட்டுல மனைவி நான் செஞ்ச தப்பை கண்டுபிடிச்சு சண்டை போடுறப்ப எல்லாம்..நேத்து நான் ஆஃபீஸ் மீட்டிங்குன்னு சொல்லிட்டு ஃப்ரெண்ட் வீட்டுல தண்ணியடிசிட்டு மல்லாந்துட்டேன்..அத அவ கண்டுபிடிக்க ,இப்ப நான் இங்க வந்தாச்சு .. எனக்கு திருமணத்தின் மீதான வெறுப்பு அதிகரித்துவிட்டது.
                                   தியானம் செய்து முடித்தவுடன் அருகிலிருந்த ஹோட்டலுக்கு சாப்பிட சென்றேன்...அங்கு ஒரு ஜோடி எனக்கு அருகில் இருந்த டேபிளில் வந்தமர்ந்தார்கள்..அவர்களை தியான மையத்திலேயே கவனித்தேன்.அருகருகே  அமைதியாகஅமர்ந்திருந்தனர் .வயது இருவருக்கும் 20 களை கடந்து 25 க்குள் ஊசாலாடிக்கொண்டிருந்தது. அவர்களின் சாப்பிட ஆர்டர் செய்தபோதுதான் கவனித்தேன்..இருவரும் வெவ்வேறு வகை உணவில் ஒரு பிளேட் மட்டுமே ஆர்டர் செய்து, அதை ஷேர் செய்து சாப்பிட்டார்கள்..ஒருவரின் ரசனையை மற்றவர் புரிந்துகொண்ட ஜோடியாக தெரிந்தது.புதுக்கல்யாண ஜோடி என்பது என் அனுமானம். இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிட ஆரம்பித்தபோது அந்த ஜோடி மீது எனக்கு மரியாதை வந்துவிட்டது..பின்ன விட்டுகொடுத்து ,அடுத்தவரின் ரசனையை புரிந்துகொண்டு வாழும் ஜோடி அல்லவா ..அவர்கள் பேசிக்கொள்வதை கேட்கும் ஆவல் வந்தது..


                     நான் முலாம்பழ ஜூஸ் குடிக்கும்போது ,
அவர்களின் சம்பாஷனையை கேட்க , தப்புன்னு தெரிஞ்சும்  என் காதை அவர்களைசுற்றி அனுப்பினேன்..
"நாம கல்யாணதுக்கு அப்புறமும் இப்படியே இருப்போமா" அவன்
"ம்"அவள்,
"அட இன்னும் கல்யாணம் ஆகல போல, லவ்வர்ஸ்" என் காது,
"ok, "உன்னோட" கல்யாணத்துக்கு அப்புறமும் என்னை மறந்துடாத ,
எப்பவும் இப்டியே இருப்போம்" அவன்,
"பார்க்கலாம்"அவள்
ஷாக்காகி "த்தூ" என துப்பிவிட்டு என் காது என்னிடமே வந்தது.
        நான் 180 டிகிரியில் கழுத்தை திருப்பி அவர்களை முறைக்க ஐஸ்கிரீமை அப்படியே வைத்துவிட்டு எஸ்ஸானார்கள் நவீன காதலர்கள்."இனிமே பொண்டாட்டி திட்டினாலும் வீட்டவிட்டு வெளியே வரக்கூடாது.அங்கயே இருந்து அஹிம்சா முறைல நல்லபேர் வாங்கிடனும், வெளில வந்தா புத்திதான் கெட்டுபோகும்" என நினைத்தவாறே நான் பில் செட்டில் செய்ய எழுந்தேன்.

4 comments:

  1. இன்றைக்கு கண், காது, வாய் அனைத்தும் மூடி கொண்டிருந்தால் பிரச்சனை இல்லை...

    அப்படி ஆகி விட்டது... ம்...

    ReplyDelete
  2. :-))) நல்ல கதை!

    amas32

    ReplyDelete