Sunday 27 April 2014

எனது பார்வையில் எனது சிறந்த ட்விட்டுகள் -பாகம் 1

           இனி ப்ளாக்கில் அதிகம் எழுதலாம் என்று நினைக்கும் போதெல்லாம் ட்விட்டர்ல் இருக்கும் 1500த்தி சொச்சம் ஃபாலோயர்களை இழந்து விடுவேனோ என்று பயம் வருவதால் எழுதி முடித்து ப்ளாக்கில் போடாமல் உள்ள பதிவுகள் மூன்றைத்தொடும்.என் சில பதிவுகளுக்கு எதிர்பார்க்காத ஆதரவும்  கிடைத்திருக்கிறது.(போன பதிவுக்கு ரெஸ்பான்ஸ் சுமார்தான்)
பதிவு எழுதிமுடித்தவுடனேயே நம்ம @get2karthik க்கு மென்சன் போட்டு கருத்துகளை தெரிவிக்கவும்ன்னு சொல்லுவேன் (டீசண்டா "படிச்சிட்டு RT பண்ணுன்னு" அர்த்தம் ) ஆரம்பத்தில் RT பண்ணின கார்த்திக் அப்புறம் போன்ல கூப்பிட்டு கருத்தை சொல்ற அளவுக்கு உஷாராயிட்டாப்டி.
         ஒரு கரண்ட் இல்லா போழுதில் புத்தகம் வாசிக்கவும் தோணாத கணத்தில் முழங்காலில் ஏற்பட்ட அரிப்பின் மையப்புள்ளியை கண்டுபிடித்து சுகமாக சொறிய ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் முழங்கால் ரோஸ் பவுடரை அப்பியது போல் ஆனது.அப்படி ஒரு சுய சொறிதலில் நம்மோட சிறந்த ட்விட்டுகளை (!!!!!!!!!!!!!!!) தொகுத்து ஒரு பதிவாக போடலாமே என முடிவெடுத்தேன். இதனால நம்ம ட்விட்டர் ஃபாலோயர்களுக்கும் ரிஸ்க் கம்மி பாருங்க.



தெனாலிசோமன் @i_thenali
எனக்கு கவிதை எழுததெரியாது என்றேன் நான், தெரியும் என்றாள் என் மனைவி, என் மகனை காட்டி

நிறைய பேர் ஆட்டோகிராப் பட டி வி டி வைத்திருப்பது வெறும் படம் பார்க்க மட்டும் அல்ல அது சிலரையும் சிலவற்றையும் நினைவுபடுத்துகிறது

தவமாய் தவமிருந்து படம் மட்டும் வராமல் போயிருந்தால் பலருக்கு அவர்கள் அப்பனின் அருமை தெரியாமலே போயிருக்கும் -என்னையும் சேர்த்து

யாரையும் சட்டென்று கிண்டல் அடித்துவிடும் நாம் நம்முடைய இசைராஜாவை மட்டும் கிண்டலடிக்காததன் காரணம் அவர் நம்தாயின் ஆணுருவம் என்பதால்தான்

நான் எவ்வளவு திட்டியும் கோபப்படாத ஒருவருடன் கைகுலுக்க முயன்றேன் அதற்குள் மற்றவர்கள் அவசரப்பட்டு அவரை புதைத்து விட்டார்கள்

ஆண்களில் தனிமனித ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் என்று தனிபிரிவு இல்லை வாய்ப்புகிடைத்தவர்கள், வாய்ப்புகிடைக்காதவர்கள் என்று இருபிரிவே உண்டு

மவுண்ட்பேட்டனின் மகளே "என்னுடைய தந்தை நேரு அல்ல" என்று விளக்கம்கொடுக்கும் அளவுக்குத்தான் இருக்கிறது இந்தியபிரதம குடும்பத்தின் மரியாதை!

கடவுளை மறுப்பவர்கள் பெரும்பாலும் தன்னுடைய தவறுக்கு அடுத்தவரை காரணமாக சொல்வது இல்லை

ரோஜாவோட வயசையும் நேருவோட வயசையும் பாக்கிறப்போ அவரு ரோஜாவை வெச்சுகிட்டிருந்தாருன்னு நம்பவே முடியல !!

எனக்கு தெரிந்தவரை ஆண்களுக்கு ஹார்ட்அட்டாக்யும் பெண்களுக்கு கேன்சரையும் பெரும்பான்மையாக ஒதுக்கிவைத்து வேடிக்கைபார்க்கிறது இயற்கை!!

உங்கள் மழலையின் கையால் ஊட்டிவிடப்படும் எந்தவொரு உணவும் அமிர்தம்தான் !!!

மனைவியுடன் எந்த கருத்துவேறுபடும் இல்லாமல் ஒருவன் வாழ்கிறான் என்றால்,அவன் அந்தபெண்ணுடன் முழுமையாக வாழவில்லை என்றும்கொள்ளலாம்!

தவறை உணர்பவர்கள் வாழ்க்கையில் தவறே செய்யமாட்டார்கள்:கருணாநிதி# பயத்துல மண்டைகுழம்பி தலைவர் தனக்குதானே அறிவுரை சொல்லிக்கிறார்!

பெரும்பாலும் தான் தோல்வியடைந்த அனுபவங்களே மற்றவர்களுக்கு முன் அனுபவமாக சொல்லப்படுகிறது !

மரணதண்டனை இல்லாத நாடு என்று ஒன்று உலகத்தில் இல்லவே இல்லை ஏனென்றால் எல்லா நாட்டிலும் திருமணம் இன்னும் வழக்கத்தில்தான் உள்ளது!

நமக்கு தேவைபடும்போது கடவுள் உதவிசெய்யவேண்டும் என்பதும் ,நாம் தவறுசெய்யும்போது கடவுள் கண்டுகொள்ளகூடாது என்பதும் விசித்ரமே!

 
கணவன், மனைவிக்குள் சண்டை வராமல் இருக்க ஒரேவழி- கல்யாணம் பண்ணிக்கொள்ளாமலே இருப்பதுதான்!

ஆக்சிடென்ட் ஆனவர்கள் அனைவரும் உடம்பில்காயத்துடன் இருக்கவேண்டிய அவசியமில்லை,பட்டுத்துணியணிந்து கல்யாணமாலையுடனும் இருக்கலாம்!

இன்றைய இளைஞர்களின் அடையாளமாக cellphone,கம்ப்யூட்டர், கார் உடன் செல்லதொப்பையும் அடையாளமாக ஆகிவருவது வருந்ததக்கது!!

விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்கத்தா என்று ஜெயலலிதாவுக்கு தீம்சாங் போட்டுகொடுத்த பெருந்தன்மை கலைஞர் குடும்பத்தைவிட யாருக்குவரும்?

இனிய இல்லறத்துக்கு பெரிய சூத்திரங்கள் தேவையில்லை, ஆனால் விட்டுகொடுத்து போகுதல் என்பதே அடிப்படை சூத்திரமாக இருக்கிறது!

ஒருவனின் வாழ்நாள் அவனுடைய பதின்மவயது நிகழ்வுகளினால் கட்டமைக்கப்படுகிறது !!

பேறுகாலம் 10 மாதம் என்பதால் பரவாயில்லை 5 மாதமாக இருந்திருந்தால் இந்நேரம் இந்தியர்கள் டபுள் செஞ்சுரி அடித்திருப்பார்கள்!!


ஒருவன் என்னதான் உலகஇசையால் சூழப்பட்டிருந்தாலும் அவன்மனதுக்கு என்றும் இதமாகஇருப்பது அவன் தன் பதின்மவயதில் கேட்டபாடல்கள்தான்#எனக்கு90s

கடைசிவரை என் தவறுக்கு கண்ணீரை காட்டாமல் இறந்து விட வேண்டும் என்பது என் விருப்பம்!!!

ஒருவனுக்கு புத்தகத்தை விட அதிக வாசிப்பைகொடுப்பது அவன் தாய், தந்தையின் வாழ்க்கைமுறைதான் !

கல்யாணத்திற்கு முன் 'ஏஞ்சல்' என்று நினைத்த மனம்தான், கல்யாணத்திற்கு பின் சிலநேரங்களில் 'டெவில்' என்றும் சொல்லவைக்கிறது!!

நெடுந்தூரசாலை பயணங்களில் என்னுடன் வர ராஜாவை தவிர வேறு சிறந்த நண்பன் எனக்கு இல்லை!!!

கலைஞர் பேச்சை திமுக-காரங்க கூட கேட்குறதில்லை,, கடல்ல வீசிதான் பாருங்களேன்? கட்டுமரமா மிதக்குறாருன்னு பார்த்திடுவோம்#

என்மகனிடம் என்னை கட்டிபிடிக்க சொல்லிகேட்டால், அவன் நடுவில் படுத்துக்கொண்டு இருவரின் மேலும் கையைபோட்டு பொதுவுடைமை செய்கிறான் ! #மகனதிகாரம் 

தாகத்திற்கு தண்ணீர் கொடுத்த சொம்பை திருடிக்கொண்டு போவதுபோல்தான், நாம் பூமியை உபயோகிக்காமல் களவாடி கொண்டிருக்கிறோம்!!
 
சங்கடமான சூழ்நிலைகளை தனக்கு சாதகமாக மாற்றிகொள்பவனே புத்திசாலி என அறியப்படுகிறான்!  

அமைதிப்படையில் சத்யராஜ் கழட்டிபோட்ட அண்டர்வேரே இன்றும் அரசியலின் மிகசிறந்த சூத்திரமாக இருக்கிறது 

நாம் நினைத்துகொண்டிருக்கும் unsung ஹீரோஸ் வரிசையில் அவரவர் தந்தையையும் சேர்த்து கொள்ளவேண்டும் !

யோகிகளும் தத்துவபுத்தகங்களும் உணர்த்தாத வாழ்க்கையை சட்டென்று ரோட்டில் அடிபட்டு செத்துபோகும் நாய் உணர்த்திவிடுகிறது சில தருணங்களில்!

சிறு குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவதற்காகவே பெண்களுக்கு கோயில்கட்டி கும்பிடவேண்டும்

பல மனைவிகள் தன் கணவனை அதிகமாக‌ கண்டுகொள்ளாமல் விட காரணம் தன்னைதவிர எந்தபெண்ணாலும் இவனுடன் குடும்பம் நடத்தமுடியாது என்பதே!

தூக்கத்தின் இடையில்எழுந்து உறங்கும் குழந்தையின் காதுவரை போர்த்திவிட்டு நெற்றியில் முத்தம்கொடுப்பதில் தெரியும்தந்தையின் பரிவு!

வீட்டிற்கு பேய்வந்து கொல்லும் கிரட்ஜ் படத்திற்கும், ஒவ்வொருவரின் கல்யாண கேசட்டிற்கும் எந்தசம்பந்தமும்இல்லை#தைரியமாக பார்க்கலாம்

மனைவி கஷ்டப்பட்டு சமைத்து அதை நாம் சாப்பிடும்போது அருகிலேயே நின்று,நல்லாருக்கா?என கேட்கும்போது "சுமார்தான்"என சொல்லமுடிவதில்லை

அதிகம் பேசாமல் இருப்பவர்கள் புத்திசாலியாக இருக்கவேண்டிய அவசியமில்லை,நினைப்பதை சரியாக சொல்லத்தெரியாதவர்களாககூட இருக்கலாம்!

திருமணமான பெண்கள் 100-க்கு 2 வீடுகளில் துன்புறுத்தப்படுகிறார்கள்!
மீதி 98 வீடுகளிலும் ஆண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்!!

அதிக சந்தோஷத்தில் இருக்கும்போது வாக்குறுதி கொடுக்காதே, அதிக கோபத்தில் இருக்கும்போது எந்த முடிவும் எடுக்காதே! -யாரோ

அடுத்தஜென்மத்தில் நான் ஆணாக இவர் பெண்ணாக பிறந்து நான்அனுபவிப்பதை இவரும் அனுபவிக்கவேண்டும் என்றவேண்டுதலும் சில மனைவிகளுக்கு உண்டு!

தன்னுடைய உண்மையான பாசத்தை மகனுக்கு கடைசிவரை சொல்லாமலே பல தந்தைகள் இறந்துவிடுகின்றனர் #அந்தவகையில் பெண்கள் கொடுத்துவைத்தவர்கள்!

தான் நல்லவன் என்று ஒருவன் நினைப்பதற்கு வைத்துகொள்ளும் அளவுகோல் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது !!

பெண்களின் உலகம் என்பது சில புத்தகங்களாலும், சில நண்பர்களாலும், நல்ல சமையலிலும் நல்ல இசையாலும் இயங்குகிறது!

Tuesday 1 April 2014

தனியாக விடமாட்டேன்

அருணுக்கு காலையில் செல்போனில் வந்த செய்தி நெஞ்சை அழுத்தியது...

அது அவனது 5 வருட காதலுக்கு பின் ,வரும் ஜூனில் திருமணத்திற்கு நிச்சயத்திருக்கும் காதலி அபர்ணா , காலையில் ஜிம்முக்கு சென்றுவிட்டு வரும்வழியில் ஆக்சிடெண்டில் இறந்துவிட்டாள் என்பதே!



அவன் கதறி அழவில்லை  ,இந்த தகவல் பொய்யாக இருக்க வேண்டும் என மனதில் நினைத்துக்கொண்டு அவனே காரை எடுத்துகொண்டு புறப்பட்டான்..

வழியெல்லாம் அபர்ணாவுடன் இரவில் பேசியது காதில் ஒலித்துகொண்டே இருந்தது.. விழியோரம் நீர் வழிய செல்போனில் ஸ்கிரீன்சேவராக இருந்த அபர்ணாவை பார்த்த போது "அபு" என பெருங்குரலில் கத்தினான். அது கதவுகள்  மூடப்பட்ட காரெங்கும் எதிரொலித்து அடங்கியது...

அவன் அபர்ணாவின் வீட்டை அடைந்தபோது கூடியிருந்த கூட்டம் அவளின் மரணத்தை சொல்லியது..

வாசலில் நின்றிருந்த அவள் தந்தை "மாப்ளே உங்ககூட சேர்ந்து வாழ அவளுக்கு கொடுத்து வைக்கலியே" என சொல்லி கதறி அழுதபோது அவனும் உடைந்து அழுதான்..

மரணித்த அவளின் முகத்தை பார்க்க தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவன் பார்த்தபோது "அபு" தூங்குவதை போலவே மரணித்திருந்தாள். நெற்றியில் லேசான ரத்தக்கோடுகள்..

அவளை உற்று பார்த்தபோது அவள் உதடு லேசாக அசைவது தெரிந்தது..பின் அவள் கால் பெருவிரலும் அசைந்தது..

மாமா "அபு" சாகலை உயிரோடுதான் இருக்கா ,என அவன் கத்தியபோது அவனுக்கு குரல் வரவில்லை..நெஞ்சடைத்தது... அங்கிருந்த கூட்டம் அவனை அதிர்ச்சியாக  பார்த்தது..

"அபு" என பெருங்குரலில் அவன் அழைக்க அவள் திடுக்கிட்டு பெருந்தூக்கத்தில் இருந்து எழுந்தவளாக ..
           "அருண்,,வந்துட்டீங்களா ,உங்கள விட்டுட்டு போயிட்டேன்னு நினைச்சேன்..," "ம்...வந்துட்டேன்,உன்னை தனியா போகவிடமாட்டேன் " என்ற அருண் அவளின் தலையை கோதி நெற்றியில் முத்தமிட்டான்...

திடீரென கூட்டம் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தது...

"அய்யோ கல்யாணபொண்ணு செத்த அதிர்ச்சியில் மாப்பிள்ளையும் செத்துட்டாரே..." என்று சொல்லி அழுதது கூட்டம் ...

அப்பொழுது அருண் ,அபர்ணா இருவரின் ஆத்மாக்களும் அங்கு அழுதுகொண்டிருந்தவர்களை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்..!