Tuesday 30 April 2013

ஆக்சிடெண்ட்

                                                        ஆக்சிடெண்ட் 

              இன்று மதியம் சுமார் 12 மணிக்கு என் அலுவலகத்தின் முன்னால் பஸ்சும் இண்டிகா காரும் கிராஸ் செய்தன ..பெரும் சத்தம் ....கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பஸ்ஸின் பக்கவாட்டில் பட்டு இண்டிகா கார் அந்தரத்தில் ஒருசுற்று (தலை குப்புற அல்ல ) பக்கவாட்டில் சுற்றி கீழே விழுந்தது ...உடனே நான் எந்திரித்து காருக்கு ஓடினேன் ....கார் முன்புறம் நன்றாக நசுங்கி விட்டது..இடித்த பேருந்து சிறிதுதூரம் தள்ளி நின்றுவிட்டது ,, ...டிரைவர் சீட்டில் இருந்தவர் தலை மற்றும் கையில்  ரத்த காயத்துடன் வண்டியில் இருந்து வெளிவர முயற்சி செய்தார் ..காருக்குள் இருந்து ஒரு பெண்ணின் கூக்குரல் தன் மகன் நிலை அறிய ....பின்னால் இரண்டு சிறுவர்களின் அழுகை சத்தம் வேறு ...நான் முன்பக்க கதவை திறந்து அவர் வெளிவர  உதவினேன் ....பின்பக்க கதவை திறக்க முடியவில்லை  ....என் உடன் பணிபுரிபவர்கள் பின் பக்க கதவை திறந்து விட்டனர் ...உள்ளே இரண்டு சிறுவர்கள் ,தாய் .......,,வண்டியை ஒட்டி வந்தது தந்தை ...இரண்டு சிறுவர்களில் ஒருவனுக்கு பெரிதாக அடி இல்லை,இன்னொருவனுக்கு கையில் அடி ..தோள்பட்டை விலகியிருக்கலாம் .... வேறு உயிர்ச்சேதம் இல்லை ...அவர்களை காரிலிருந்து வெளிலே கூட்டி வந்து எங்கள் அலுவலக வாசற்படியில் உட்கார வைத்தோம்...
அதற்குள் கூட்டம் கூடி விட்டது சுமார் 20 பேருக்கு மேல் சேர்ந்து விட்டனர்....நான் அலுவலகத்திற்கு  உள்ளே ஓடி வந்து 108-ஐ அழைத்தேன் ..விவரம் சொன்னேன் ..விவரங்கள் கேட்டு காத்திருக்க சொன்னார்கள் ...வெளியே நின்றவர்களும் 108-க்கு அழைத்தனர் ...அதே நேரம் என் மொபைலில் அருகிலுள்ள போலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை  அழைத்தேன் ...என்னை போலீஸ் ஸ்டேசனில் தெரியும் என்பதால் போனை எடுத்தவுடன் "சார் தகவல் தெரியும் ,போலிஸ் வந்துக்கிட்டிருக்கு" என்றார் ...அதே நேரம் காத்திருப்புக்கு பின் "சார் அந்த ஏரியாவில் உள்ள ஆம்புலன்ஸ் வெளியே சென்றுள்ளது அங்குவர முக்கால் மணி நேரம் ஆகும் ,என்ன செய்யலாம்" என என்னிடம் கேட்டார், மறுமுனையில் கால்சென்டர் பணியாளருடன் குறிப்பிட்ட ஆம்புலன்சின் டிரைவரும் கான்பிரன்சில் இருந்தார் ... கிட்டதட்ட 5 நிமிடத்தில் போலீசும் வந்து விட்டார்கள்  ...நான் உடனே "சரி போலீஸ் வந்து விட்டது அவர்களை வைத்து வேறு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொள்கிறேன்" என்று சொல்லி வைத்துவிட்டேன்...
நான் போலீஸ்காரரிடம் சென்று (தெரிந்தவர்) "108 கிடைக்கவில்லை வேறு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யுங்கள் "என்றேன் ..அதே நேரத்தில் அடிபட்டவர்களுக்கு என் ஆபிசில் இருந்து தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி கொண்டிருந்தார்கள் ...வேறு ஆம்புலன்ஸ் உடனே கிடைக்கவில்லை ....கிட்டத்தட்ட 20 நிமிடம் ஆன பிறகு ஆம்புலன்ஸ் வந்தது ...அப்போது அந்த காரில் வந்த பெண்மணியின்  (தலையில் லேசான அடி ) போனை வாங்கி அவர் உறவினர்களுக்கு தகவல் சொல்ல முயற்சித்து கொண்டிருந்தார் ..ஆனால் அவர் தம்பியே போனை எடுக்கவில்லை ,,,முதலில் அடிபட்ட பெண்மணியின் கணவர் ,குழந்தைகள் இருவரையும் ஆம்புலன்சில் ஏற்றிவிட்டு GH க்கு புறப்பட்டது ஆம்புலன்ஸ் ..பெண்மணியின் உறவினர்களுக்கு போன் செய்ய முயற்சி செய்தவர் அவருடைய காரில் பெண்மணியை GH -க்கு அழைத்து சொல்வதாக சொன்னார் ...காரில் இருந்த அவர்களின் உடமைகளை எல்லாம் எங்கள் அலுவலகத்திற்குள் கொண்டு வந்து வைத்துவிட்டோம் ....அந்த பெண்மணியை உள்ளே அழைத்து வந்து முகத்தை கழுவி துடைக்க உதவினோம் ...பின்னர் அவர் சொன்ன இன்னொரு நம்பரை டயல் செய்து கொடுத்தேன் .,..மறுமுனையில் (இன்னொரு தம்பி போல )போனை எடுத்தார் ...பெண்மணி போனை வாங்கி அழுது கொண்டே பேசினார் ,,பிறகு நண்பர் ஒருவர் போனை வாங்கி விவரத்தை  அவர் தம்பியிடம் சொல்லி பயப்பட ஒன்றும் இல்லை நீங்கள் கிளம்பி வந்தால் போதும் என்றார் ...பிறகு அந்த பெண்மணி தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு மற்றவற்றை எங்கள் அலுவலகத்திலேயே வைத்துவிட்டு  எங்களுக்கு நன்றி சொல்லிவிட்டு GH -க்கு கிளம்பினார்...அவர்கள் இருவரும் சித்த மருத்துவ டாக்டர்களாம் ,கோவையிலிருந்து தேனி நோக்கி செல்லும்போது நடந்த விபத்து இது...தவறு இருபுறத்திலும் உள்ளது ....

பிறகு போலீஸ்காரர்  வந்து "கிரேன் வருவதற்குள் யாராவது வந்து கார் பேட்டரியை கழட்டிக்கொண்டு போய் விடப்போகிறார்கள் பார்த்து கொள்ளுங்கள் (!!!!) ,நாங்கள் சொல்லாமல் அவர்களின் பொருட்களை யாரிடமும் கொடுக்காதீர்கள்" என்று சொல்லிவிட்டு போனார் ..
பிறகு மதியம்  பஸ் மேனேஜர் வந்து என்னிடம் விவரம் சேகரித்தார் ...அவர் உறவினர் ஒருவரும் வந்து விட்டார் .அவர் ஆக்சிடெண்ட் ,அவர்களின் நிலை குறித்த தகவல்களை என்னிடம் கேட்டு தெரிந்துகொண்டார் ......பின்னர் போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று போலீஸை உடன் அழைத்து வந்து பொருட்களை பெற்றுக்கொண்டார்..
அவர் அந்த பெண்மணிக்கு போன் போட்டு என்னிடம்  கொடுத்தார் "ரொம்ப நன்றி சார் எங்களுக்கு உதவினதுக்கு என்றார் ,உங்கள் விசிட்டிங் கார்டை கொடுத்து விடுங்கள்" என்று கூறினார் ,"பரவாயில்லங்க" என்றேன் நான் ,, அவர் உறவினரிடம் என் விசிட்டிங் கார்டையும் கொடுத்துவிட்டேன்... அவர்கள் கோவை PSG -ல் அட்மிட் செய்யப்பட்டுள்ளார்கள் பயமில்லை  எனவும் தெரிந்து கொண்டேன் ....


இந்த சம்பவம் எனக்கு கொடுத்த அனுபவங்கள்  :-

"தேவையற்ற வேகமும் , கவனக்குறைவும் வாழ்க்கையை புரட்டி போட்டுவிடும்"

 ஒரு விபத்து நடந்தால் உடனே ஒன்று சேர்ந்து அவர்களை காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள் ...அடுத்தகட்ட நடவடிக்கையும் என்னவென தெரிகிறது ...மக்களுக்கு "ஹேட்ஸ் ஆப் "...

இன்று விபத்து நடந்த இடத்துக்கு உடனே வந்த போலீசின் வேகமும் ,நடவடிக்கைகளும் நன்றாக இருந்தது.

ஒரு சிலர் சில குறிப்பிட்ட நம்பரில் இருந்து போன் வந்தால் போனை எடுக்காமல் இருப்பதும் ,புது நம்பர் அழைப்பை எடுக்காமல் இருப்பதும் தவறு.
முடிந்தளவுக்கு போனை அட்டெண்ட் செய்யுங்கள் ..அவர் மொக்கை போடுபவர் ,அல்லது தேவையில்லாதவராக இருந்தால் விஷயம் மட்டும் கேட்டு எதோ காரணம் சொல்லி  போன் கட் செய்யலாம் ,.ஆனால் எப்போதும் போன் அட்டெண்ட் செய்யாமல் இருக்க வேண்டாம்.அது  அவரின் உயிர் காக்கும் "Call" ஆக கூட இருக்கலாம்.

வழியில் போகிறவர் கூட தன்  பிரச்னையாக நினைத்து வந்து உதவி செய்கிற
நிலை இன்னமும் தமிழ்நாட்டில் இருக்கிறது  ...

என்னளவில் பதட்டப்படாமல் என்னாலான உதவிகளை அவர்களுக்கு செய்தேன் ...இதில் என்  பொதுநலத்தோடு கொஞ்சம் சுயநலமும் உள்ளது ...நான் இங்கு மனைவி குழந்தையுடன் வசிக்கிறேன் ..அங்கு ஈரோட்டில் வசித்துவரும் என் தாய்,தந்தைக்கு  இதுபோல் ஏதேனும் அவசரஉதவி தேவையெனில் அவர்களுக்கு  ஒருவர் இதுபோல் பார்த்து உதவிசெய்வார் என்ற நம்பிக்கை  உள்ளது ....எல்லாவற்றிக்கும் மேலாக" கடவுள் இருக்கிறார்  அவர் ஆபத்து காலத்தில் ஒருவரை கண்டிப்பாக கைவிட மாட்டார்"
என நம்புகிறேன் "தெய்வம் மனுஷ ரூபேனா "


Monday 15 April 2013

ஷீர்டி சாய்பாபா ஒரு அனுபவம்



ஷீர்டி சாய்பாபா ஒரு அனுபவம்





          1999-ம் ஆண்டு  நான் முதன்முதல் சென்று தரிசித்த சித்தர் 
                         பகவான்"ரமண மஹரிஷி"
          அந்த அனுபவம்தான் நான் "சாமியார்கள்" என்று பொதுப்படையாக சொல்லி அழைத்துவந்தவர்களை சித்தர்கள் என்ற வார்த்தையை சொல்லி அழைக்ககாரணம். பிறகு ரமணமஹரிஷியை தொடர்ந்து வணங்கிவருகிறேன்.சமீபமாக மற்ற சித்தர்கள் குறித்த அறிந்துகொள்ளும் ஆர்வமும் வந்துள்ளது.அதில் முதன்மையானவர் "ஷீர்டி சாய்பாபா" கடந்தவருடம் குமுதத்தில் வெளிவந்த அவரது மகிமைகள் குறித்ததொடருக்குபின் அவர்குறித்த ஆர்வம் இன்னும் அதிகரித்தது.
           அதை படிக்கும்போது ஒரு மகான் மக்களுக்காக சாதாரண மனிதராக வாழ்ந்து அவர்களிடம் பிச்சை எடுத்து உண்டு அவர்களின் பாவங்களை போக்கி, அவர்களின் பாவத்தையும் ,நோயையும் தன் உடலில் கட்டியாக வாங்கிகொண்டு வாழ்வளித்தது,
எத்தனையோ பக்தர்களின் குறையை நீக்கியது ,உறங்கும்போது உயரமான இடத்தில் கால்நீட்டிகூட படுத்துகொள்ளும் சுகமில்லாமல் படுத்துகொண்டது போன்றவற்றை படிக்கும்போது அவரை தொழும் ஆர்வம்அதிகரித்தது. ஆனால் அவருடைய
போட்டோவோ சிறிய விக்கிரகமோகூட என்னிடம் இல்லை.
            என் வீட்டு பூஜையறையில் ரமண மகரிஷி,கசவனம்பட்டி சித்தர்,சத்ய சாய்பாபா,பாம்பன் சுவாமிகள் ஆகியோரின் படங்கள் உண்டு.ஆனால் ஷீர்டி சாய்பாபா-வின் படம் மட்டும் இல்லை.வீதியில் செல்லும்போது அவரின் படங்களை பார்ப்பேன்,


 
அவர் படம்வரைந்த போர்டுகள் கண்ணில்படும்.அதை பார்க்கும்போது அவர் படத்தை வீட்டில் வைத்து தொழவேண்டும் என்ற எண்ணம் வந்தது,கூடவே விபரீதஆசையும் "அவர்தான் சக்தி வாய்ந்தவர் ஆயிற்றே, பக்தர்களின் வீட்டிற்கே தேடிவந்து அவர்களின் குறைகளை போக்குபவர் ஆயிற்றே, அவரே நம்ம வீட்டுக்கு வரட்டும் நானாக அவரின் படத்தையோ விக்கிரகத்தையோ வாங்ககூடாது" என்ற எண்ணமும் வந்து அதுவே முடிவாகவும் ஆனது!!! பாபா வீட்டிற்கு வருவாரா?
             நிறைய நேரங்களில் அவர் படம் நம் வீட்டு பூஜையறையில் இல்லையே என்ற ஏக்கம் வந்து,வந்துபோகும்.இந்தநேரத்தில் என் MDன் நண்பர் ஷீர்டி சென்று வந்தார் அவர் சென்றுவந்தவுடன் அவருடைய பிரச்சனைகள் படிப்படியாக குறைந்ததை சொன்னார்.அது பற்றி பேசினோம்.இதனிடையில் எங்க ஹவுஸ்ஒனர் வீட்டில் சாய்பாபா குறித்து பேசியிருக்கிறார்கள் ,அன்றே சாய்பாபா படத்தை வண்டியில் வைத்துகொண்டு வருபவர்கள் அவர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் (பக்கத்து காம்பவுண்ட்). ஆனால் எங்கள் வீட்டிற்க்கு அந்த (சாய்பாபா) வண்டி வரவில்லை.ஹவுஸ்ஒனர் வீட்டில் அதை ஒரு அழைப்பாக ஏற்று ஷீர்டி சென்று வந்துவிட்டார்கள்.அவர்கள் என் வீட்டிற்கு சிறிய பிரசாதமோ சாய்பாபாவின் படமோ கூட கொடுத்தனுப்பவில்லை.
  இது எனக்கு தெரிந்தபோது மிகப்பெரிய வருத்தம்.எனக்கு தற்போது கொஞ்சம் பிரச்சனைகள் உள்ளது.அதே சமயம் MD-யும் திடீரென 
வெளியூர் கிளம்பி போனார் 
              அதற்க்கு அடுத்தநாள் நான் பூஜையறையில் சாமி கும்பிடும்போது சத்யசாய்பாபாவிடம் "நீங்கள் என்னை எத்தனையோ பேரை தேடிவருகிறீகள்,நன்மை செய்கிறீர்கள் ஆனால் என்னை உங்கள் பக்தனாக ஏற்றுக்கொண்டதாக ஏதேனும் சிறுஅடையாளமாவது கொடுங்கள்"என்று வேண்டிக்கொண்டேன்.அன்றோ அல்லது அதற்க்கு அடுத்த நாளோ என் MD யை அழைத்தபோது ஷீர்டி போய்விட்டு வந்து கொண்டிருப்பதாக  கூறினார்.நான் பேசிமுடித்த பின்னர்"அடடா இவரிடமாவது சாய்பாபாவின் படத்தை வாங்கிவர சொல்லியிருக்கலாமே"என்று நினைத்து வருத்தப்பட்டுகொண்டேன்.பின்னர் இரண்டுநாள் கழித்து மீண்டும் சாய்பாபாவின் படம்வைத்து அலங்கரித்தவண்டி ஒன்றுவந்து எங்கள்வீட்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்தது,அப்போதுகூட அவரைபோய் பார்த்து தொழுதுவிட்டுவரலாம்,இதென்ன வீம்பான மனம் என நினைத்தேன், ஆனாலும் போகவில்லை.பிறகு இதுகுறித்த சிறுஉறுத்தல் இருந்துகொண்டே இருந்தது.
             சென்ற வெள்ளிகிழமை வேறு ஒரு வேலையாக MD வீட்டிற்கு சென்றிருந்தேன் அந்த வேலைமுடிந்து கிளம்பும்போது,அவர் வீட்டிற்கு உள்ளே அழைத்து சென்றார் "ஏன்டா உனக்கு சாய்பாபா சிலை வேணுமின்னா எங்கிட்டதானே நீ கேட்கணும், அவன்கிட்டே போய் கேட்டிருக்கே என்றார். (அவர் குறிப்பிட்டது இதற்கு முன்பு ஷீர்டி நண்பரை பற்றி ) "இல்லீங்க சார் நான் எதுவும் அவர்கிட்ட கேட்கல ,சில நேரத்தில் பாபா பற்றி பேசியிருக்கிறேன் அவ்ளோதான்" என்றேன் (உண்மையில் நான் அந்த நண்பரிடம் பாபாவின் சிலையையோ போட்டோவையோ கூட கேட்கவில்லை) "நீ கேட்கலையா, கேட்டமாதிரி இருந்ததே" என்று சொல்லிக்கொண்டே சிறிய செவ்வகபெட்டியை கொடுத்தார்.

                                               

            அதை திறந்துபார்த்தபோது உள்ளங்கை அளவுக்கு வெண்மையான 
"ஷீர்டிசாய்பாபாவின்" சிலை உள்ளே இருந்தது.எனக்குவந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை,உலகில் எங்கோ சிறுமூலையில் இருக்கும் பக்தனின் கோரிக்கையை ஏற்றுகொண்டு அவன் வீடு தேடிவந்த மகானின் கருணையை என்னென்று சொல்லுவேன்.
என் வீட்டு பூஜையறையில் அந்த சிலையை வைக்கும்போது சத்யசாய்பாபா-வை வணங்கி "சொன்னதை செய்து விட்டீர்கள்நன்றி ,நீங்கள் என்னை பக்தனாக ஏற்றுகொண்டதற்கு அடையாளத்தை காட்டிவிட்டீர்கள் நன்றி" என்று சொல்லி சத்யசாய்பாபா,ஷீர்டிசாய்பாபா இருவரையும் வணங்கினேன்.இனி என் பிரச்சனைகள் கண்டிப்பாக தீரும் என நம்புகிறேன் "சாய்பாபாவின் கருணைக்கு எல்லை ஏது", "பாபா வீட்டிற்கு வந்துவிட்டார்"  


                                  (அவர் பாதங்கள் )

Saturday 6 April 2013

உயிர் நண்பன்

                                                            உயிர் நண்பன் 
 


                     வேலை முடிந்து கிளம்பும்போது  செல்போன் ரிங்கடித்தது .. பார்த்தால் "ப்ரைவேட் நம்பர்" என செல்போன் திரை காட்டியது ...ஹலோ என்றேன் ...டேய் மச்சான், நான் வினோத் பேசறேன் ,எங்க இருக்க...டேய் நீயாடா எப்ப கலிபோர்னியாவுல இருந்து வந்த ,உனக்கு என்கேஜ்மென்ட்  அடுத்தமாசம்தானே ....சும்மா ,ஒரு சேஞ்சுக்கு கல்யாணமே சூசைட்தாண்டா, அதான் அதுக்கு முன்னாடியே நம்ம பசங்க எல்லாரையும் பார்த்துரலாம்ன்னு வந்தேன் ,அப்புறம் எங்கேயும் நகரமுடியாது ,அதான் உடனே வந்துட்டேன் ,சரிடா குப்பண்ணா பிரியாணி கடைக்கு 8 மணிக்கு வந்துடு,  வெயிட் பண்றேன் ,கொஞ்சம் கதை நிறைய பிரியாணி ....சரிடா என்றேன் ..அவனுக்கு குப்பண்ணா பிரியாணி ரொம்ப  பிடிக்கும்,கலிபோர்னியாவுக்கு போனதுக்கு அப்புறம் இப்பதான் முதல்தடவை வர்றான் .
             7.45 க்கு குப்பண்ணாவுக்கு சென்றேன் அவன் எனக்கு முன்பே காத்திருந்தான் ...கொஞ்சம் டல்லடித்திருந்தான்... ஏன்டா  டல்லா இருக்கே என்றேன் ,மொதல்ல ஆர்டர் பண்ணு என்றான் ...பிரியாணி ,வஞ்சிரம் மீன் உள்ளே போனதும் மெதுவாக பேச ஆரம்பித்தான் "இங்க வேற கல்யாணம் பிக்ஸ் பண்றாங்க ,அங்க ஒரு மேட்டர்ல சிக்கிட்டேன் அதுல இருந்து வெளிய வர்றது  ரொம்ப கஷ்டம் ,அதுனால ஒரு முடிவு பண்ணிட்டேன் " என்ன பிரச்னை .....ப்ச் ,சொல்லி சரி பண்ற நிலைமைய தாண்டிடிச்சு ,விட்ரு ...சரி விடு ,சரியாகிடும் நாங்கெல்லாம் இருக்கோம்ல ..."நீங்க இருந்து என்ன பண்ணுவீங்க ,போடா" ,அந்த பிரச்சனைய தீர்க்க முடியாது ,நான் பார்த்துக்குறேன்" அவன்  சகஜமாக கொஞ்சநேரம் ஆனது  ,டின்னர் முடிஞ்சு  கொஞ்சம் கவலையுடன்  என்னை திரும்பி பார்த்தபடியே போனான் .
                வீட்டுக்கு போய் கட்டிலில் விழுந்தேன்  நல்லதூக்கம் ...காலையில அம்மா பதட்டமா  எழுப்பினாங்க ..டேய் டிவிய பாருடா ...பிளாஷ் நியூஸில் "கலிபோர்னியாவில் இந்திய இளைஞர் தற்கொலை" ..."50-வது மாடியில் இருந்து குதித்தார்,பெயர் வினோத், வயது 26, ஈரோட்டை சேர்ந்தவர் "ன்னு புதியதலைமுறையில் தகவல் சொன்னார்கள் அதில் அவர்கள் காட்டிய போட்டோவில் இருந்தது வினோத் ..என்னால் நம்ப முடியவில்லை...என் போனை எடுத்து பார்த்தேன் அதில் கால் ரெஜிஸ்டரில் அந்த பிரைவேட் நம்பர் மட்டும் இல்லை ...திடீரென போன் ரிங்கடித்தது,,, " foreign number " எடுத்தேன் ....
லண்டனில் இருந்து எங்க கிளாஸ்மேட்  மகேஷ் பேசினான் ..
            "டேய் கார்த்தி .. வினோத் வந்திருக்கான்டா பேசுறியா"
       எனக்கு தொண்டை வறண்டு மயக்கம் வந்துகொண்டிருக்கிறது !