Thursday 20 June 2013

பார்வையற்றவரின் மதிய உணவு

                                          பார்வையற்றவரின் மதிய உணவு

                                                       


               சென்ற வாரத்தில் ஒரு நாள் மதியம் 1.30 மணியளவில் பைக்கில் சென்று கொண்டிருந்தேன் அப்போது பார்வையில்லாத ஒருவர் காருக்கு அருகில் நின்று காருக்குள் ஆள் இருப்பதாக எண்ணிக்கொண்டு ஊதுபத்தி விற்க முயற்சி செய்துகொண்டிருந்தார்.நான் அதை கவனித்து அருகில் சென்று " காருக்குள் யாரும் இல்லை" என சொல்லிவிட்டு அவரிடம் 30 ரூ  மதிப்புள்ள ஊதுபத்தி பாக்கெட் ஒன்றை வாங்கிக்கொண்டேன், 50 ரூ நோட்டை கொடுத்து மீதி சில்லறை 20 ரூ-வையும் வாங்கிக்கொண்டேன்..
               பிறகு அவர் என்னிடம் "சார் இங்க பக்கத்துல எதாவது ஹோட்டல் இருக்குதா?" என்றார் நான் "ம், இருக்குதே உக்காருங்க டிராப் பண்ணுறேன்-ன்னு சொல்லி அவரை வண்டியில் ஏற்றிக்கொண்டேன் . அவர் "சார் ஒரு ஊதுபத்தியாவது  வித்துட்டுதான் சாப்பிடனமுன்னு இருந்தேன், காலையில இருந்து ஒரு ஊதுபத்தி கூட விக்கல ,அதனால இன்னும் சாப்பிடல ,இப்பதான் சாப்பிடனும்"ன்னு சொன்னார் ...எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது ..ஓரளவுக்கு சாப்பாடு விலை குறைவாக இருக்கும் ஹோட்டலில் அவரை இறக்கிவிட்டு ,அங்கு என்னென்ன சாப்பிடலாம் என்று சொல்லி என் கையில் மீதமிருந்த 20 ரூ-வையும் அவருக்கே கொடுத்தேன் .சிறிது மறுப்புக்கு பிறகு வாங்கிக்கொண்டார்.பிறகு அவரிடம் இருந்து
விடை பெற்றுக்கொண்டேன்.
                  நான்  என் வீட்டு உபயோகத்துக்கும் அலுவலக உபயோகத்துக்கும் தேவையான ஊது பத்திகளை இது போன்ற பார்வையற்றவர்களிடமே கடந்த 2 வருடங்களாக வாங்கி வருகிறேன் ..எதோ என்னால் முடிந்த அளவு அவர்களுக்கு உதவுவதாக ஒரு மன திருப்தி.
                 இதை  படிப்பவர்கள் இனி இதைப்போல் பார்வையற்றவர்கள் ஏதாவது விற்க கண்டால் உங்களுக்கு தேவையும்,நேரமுமிருந்தால் அந்த பொருளை அவர்களிடமே வாங்கிக்கொள்ளுங்கள்.நீங்களே அவரின் முதல் வாடிக்கையாளராக கூட இருக்கலாம் ...அது அவரின் அன்றைய உணவுக்கு வழிவகுப்பதாக கூட இருக்கலாம்   ......... "அன்பே சிவம்"