Friday 20 December 2013

பிரியாணி

 

        இது கடந்த 4 வருடங்களில் நான் தியேட்டருக்கு சென்று ரசித்த ஐந்தாவது படம்.அதுவே நான் விமர்சனம் எழுதும் முதல் படமாகவும் வந்திருக்கிறது.ஒரு சில குடும்பங்களில் அனைவரும் ஒரே நடிகருக்கு மட்டும் ரசிகர்களாக இருப்பார்கள் அது போல் என் குடும்பத்தில் அனைவரும் ரசிகர்களாக இருக்கும் இயக்குனர் என்றால் அது வெங்கட் பிரபு-தான்.சென்னை-28 மூலம் தமிழ் சினிமாவுக்கு வேறு உத்தியில் கதை சொன்ன இயக்குனர் இப்ப மசாலா மணம் கமகமக்கும் "பிரியாணி"யை கிண்டியிருக்கிறார்..

      முதலில் யுவனுக்கு ( U1) 100 வது படத்துக்கான வாழ்த்துக்கள். பொறுப்புணர்ந்து பாடல்களையும் பின்ணணி இசையையும் தந்திருக்கிறார் "இளைய இசைஞானி"  ,"சிங்ககுட்டியாச்சே" !!!

        கதை - பாட்டில் ,பெண்களிடம் போதையாக இருக்கும் "சுகன்" என்கிற கார்த்திக்கு அவரது புத்திசாலித்தனத்தை பார்த்து  ஓவர் நைட்டில் கோடீஸ்வரனாகும் வாய்ப்பை தர (மருமகன் ஆக்கி கொள்ள ) விரும்புகிறார் நாசர்.அதை எதிர்க்கிறார் நாசரின் மூத்த மருமகன் "ராம்கி".நாசருடன் பார்டியில் கலந்துகொண்ட பிறகு சென்னைக்கு போகும் வழியில் பிரியாணி சாப்பிட ஆசைப்படுகிறார் கார்த்தி.அங்குவரும் ஒரு பெண்ணின் அழைப்பை ஏற்று அவரது ஹோட்டல் அறைக்கு சென்று தண்ணியடித்து "மிஸ்ஸிபி" நதியில் கலக்க முயற்சிக்கிறார்.
          காலையில் எழுந்து பார்த்தால் காரில் கிடக்கிறார்.அவரது காரில்
 நாசரின் பிணம், அவரது நண்பன் எங்கே ?,அவரை அழைத்து வந்த பெண் எங்கே?,நாசரை கொலை செய்தது யார்?,நாசரை கொலை செய்ததாக போலீஸ் ஏன்  கார்த்தியை துரத்துகிறது ? அத்தோடு நில்லாமல் கார்த்தியின் குடும்பத்தை அழிக்க நினைக்கும்  வில்லன்/வில்லி யார்??!!
 என்பதே பிரியாணி-யின் ஃபார்முலா.
           இந்த ஃபார்முலாக்களை சரி விகிதத்தில் தூவி பிரியாணி  கிண்டியிருக்கிறார்  வெங்கட் பிரபு.



       கார்த்தி இந்த படத்தில் இயக்குனரை நம்பி தன்னை ஒப்படைத்திருப்பது தெரிகிறது.பருத்திவீரன்,ஆ,ஒருவன் பாதிப்பில்லாத ஃப்ரெஷ் கார்த்தி .இயக்குனர் சொன்னதை சரிவர செய்து தன்னை ஒரு நடிகன் என நிரூபித்திருக்கிறார். இடைவேளைக்கு பிறகு மொத்தமே அவருக்கு இரண்டு அல்லது மூன்று காஸ்டியூம்தான் நினைக்கிறேன்.அந்த அளவுக்கு கோ-ஆப்ரைட் செய்து நடித்திருக்கிறார்.ஹன்சிகா கேரக்டருக்கு சொல்லிக்கொள்ளும்படி பெரிய வேலை இல்லை எனினும் இந்த படத்துக்கு அவர் ஒகே-தான்.பிறகு பிரேம் ஜி வழக்கம்போல அண்ணன் சொல்லிக்கொடுத்ததை செய்து நல்ல பெயர் வாங்கிக்கொள்கிறார்.
        "ராம்கி" அப்படியே இருக்கிறார்.சில இடங்களில் முதிர்ச்சி தெரிகிறது.அவருக்கு இன்னும் கொஞ்சம் டைமிங் வரவேண்டும் என நினைக்கிறேன் .பணக்கார மாப்பிள்ளை ராம்கிக்கு நண்பனாக டெரர் முகத்துடன் வருகிறார் ஜெயப்பிரகாஷ்.சம்பத் இருக்கிறார், ஆனால் அவருக்கான "நச்" கேரக்டர் இல்லை.மல்டி ஸ்டாரர் படங்களை "வெங்கட் பிரபு" வெறுக்க வைத்துவிடுவாரோ எனுமளவுக்கு நடிகர்கள் வருகிறார்கள் "ஜெய் ,விஜய் வசந்த், அஸ்வின், வைபவ் ,அரவிந்த் ஆகாஷ் மற்றும் பலர்......போதும் ப்ரோ முடியல..
          வெங்கட் பிரபு பாணியில் முதல் பாதி ஜாலி ஹோலி  பட்டாசு  என
கலர் கலராய் விரிகிறது படம் .இரண்டாம் பாதியில் பட்டாசு கிளப்பியிருகிறார் வெங்கட்.இடைவேளை முடிந்து உள்ளே வந்து உட்கார்ந்தவுடன் "ஒரு சாதாரண மனிதன் பெரிய பிரச்சனையில் சிக்கவைக்கப்பட்டால் என்ன செய்வான்" என்பதை  சற்றே எதார்த்தை மீறி கமர்சியல் படத்துக்கான நியாயத்துடன்  பரபரப்பாய் கிளைமேக்ஸை நோக்கி நகர்கிறது படம்,சில ஸ்பீடு பிரேக்கர்களுடன் ,வெங்கட் பிரபுவே பல பேட்டிகளில் இரண்டாம் பாதி என்னுடைய மற்ற படங்களை போலல்லாமல்  காமெடி இல்லாமல் இருக்கும் என்றெல்லாம் சொன்ன பிறகும் பறக்கும் இரண்டாம் பாதியில் வரும் காமெடிகள்தான் படத்துக்கு ஸ்பீட் பிரேக்.


மீதி தியேட்டர்ல .....
        

         வெங்கட் பிரபுவுக்கு இந்த படம் "சரோஜா" க்கு மேல ,மங்காத்தா-வுக்கு கீழ. கார்த்தியை  பொறுத்தவரை எதாவது ஹிட் படம் கொடுத்துவிட மாட்டோமா என நடுக்கடலில் தவிப்பவருக்கு  இந்த படம் நிச்சயம் உயிர் காக்கும் படகுதான். பெரிய இடைவெளிக்கு பிறகு கார்த்தி-க்கு ஒரு ஹிட் படம்...

         மொத்தத்தில் இது "கமகமக்கும் சூடான பீஸ் ஃபுல் பிரியாணி" கொஞ்சமே கொஞ்சம்  மசாலா கம்மியா....."வெங்கட் பிரபு"வின் டயட் வெற்றியில்தான் முடிந்திருக்கிறது... 

"என்னுடைய மார்க்"