Monday 15 April 2013

ஷீர்டி சாய்பாபா ஒரு அனுபவம்



ஷீர்டி சாய்பாபா ஒரு அனுபவம்





          1999-ம் ஆண்டு  நான் முதன்முதல் சென்று தரிசித்த சித்தர் 
                         பகவான்"ரமண மஹரிஷி"
          அந்த அனுபவம்தான் நான் "சாமியார்கள்" என்று பொதுப்படையாக சொல்லி அழைத்துவந்தவர்களை சித்தர்கள் என்ற வார்த்தையை சொல்லி அழைக்ககாரணம். பிறகு ரமணமஹரிஷியை தொடர்ந்து வணங்கிவருகிறேன்.சமீபமாக மற்ற சித்தர்கள் குறித்த அறிந்துகொள்ளும் ஆர்வமும் வந்துள்ளது.அதில் முதன்மையானவர் "ஷீர்டி சாய்பாபா" கடந்தவருடம் குமுதத்தில் வெளிவந்த அவரது மகிமைகள் குறித்ததொடருக்குபின் அவர்குறித்த ஆர்வம் இன்னும் அதிகரித்தது.
           அதை படிக்கும்போது ஒரு மகான் மக்களுக்காக சாதாரண மனிதராக வாழ்ந்து அவர்களிடம் பிச்சை எடுத்து உண்டு அவர்களின் பாவங்களை போக்கி, அவர்களின் பாவத்தையும் ,நோயையும் தன் உடலில் கட்டியாக வாங்கிகொண்டு வாழ்வளித்தது,
எத்தனையோ பக்தர்களின் குறையை நீக்கியது ,உறங்கும்போது உயரமான இடத்தில் கால்நீட்டிகூட படுத்துகொள்ளும் சுகமில்லாமல் படுத்துகொண்டது போன்றவற்றை படிக்கும்போது அவரை தொழும் ஆர்வம்அதிகரித்தது. ஆனால் அவருடைய
போட்டோவோ சிறிய விக்கிரகமோகூட என்னிடம் இல்லை.
            என் வீட்டு பூஜையறையில் ரமண மகரிஷி,கசவனம்பட்டி சித்தர்,சத்ய சாய்பாபா,பாம்பன் சுவாமிகள் ஆகியோரின் படங்கள் உண்டு.ஆனால் ஷீர்டி சாய்பாபா-வின் படம் மட்டும் இல்லை.வீதியில் செல்லும்போது அவரின் படங்களை பார்ப்பேன்,


 
அவர் படம்வரைந்த போர்டுகள் கண்ணில்படும்.அதை பார்க்கும்போது அவர் படத்தை வீட்டில் வைத்து தொழவேண்டும் என்ற எண்ணம் வந்தது,கூடவே விபரீதஆசையும் "அவர்தான் சக்தி வாய்ந்தவர் ஆயிற்றே, பக்தர்களின் வீட்டிற்கே தேடிவந்து அவர்களின் குறைகளை போக்குபவர் ஆயிற்றே, அவரே நம்ம வீட்டுக்கு வரட்டும் நானாக அவரின் படத்தையோ விக்கிரகத்தையோ வாங்ககூடாது" என்ற எண்ணமும் வந்து அதுவே முடிவாகவும் ஆனது!!! பாபா வீட்டிற்கு வருவாரா?
             நிறைய நேரங்களில் அவர் படம் நம் வீட்டு பூஜையறையில் இல்லையே என்ற ஏக்கம் வந்து,வந்துபோகும்.இந்தநேரத்தில் என் MDன் நண்பர் ஷீர்டி சென்று வந்தார் அவர் சென்றுவந்தவுடன் அவருடைய பிரச்சனைகள் படிப்படியாக குறைந்ததை சொன்னார்.அது பற்றி பேசினோம்.இதனிடையில் எங்க ஹவுஸ்ஒனர் வீட்டில் சாய்பாபா குறித்து பேசியிருக்கிறார்கள் ,அன்றே சாய்பாபா படத்தை வண்டியில் வைத்துகொண்டு வருபவர்கள் அவர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் (பக்கத்து காம்பவுண்ட்). ஆனால் எங்கள் வீட்டிற்க்கு அந்த (சாய்பாபா) வண்டி வரவில்லை.ஹவுஸ்ஒனர் வீட்டில் அதை ஒரு அழைப்பாக ஏற்று ஷீர்டி சென்று வந்துவிட்டார்கள்.அவர்கள் என் வீட்டிற்கு சிறிய பிரசாதமோ சாய்பாபாவின் படமோ கூட கொடுத்தனுப்பவில்லை.
  இது எனக்கு தெரிந்தபோது மிகப்பெரிய வருத்தம்.எனக்கு தற்போது கொஞ்சம் பிரச்சனைகள் உள்ளது.அதே சமயம் MD-யும் திடீரென 
வெளியூர் கிளம்பி போனார் 
              அதற்க்கு அடுத்தநாள் நான் பூஜையறையில் சாமி கும்பிடும்போது சத்யசாய்பாபாவிடம் "நீங்கள் என்னை எத்தனையோ பேரை தேடிவருகிறீகள்,நன்மை செய்கிறீர்கள் ஆனால் என்னை உங்கள் பக்தனாக ஏற்றுக்கொண்டதாக ஏதேனும் சிறுஅடையாளமாவது கொடுங்கள்"என்று வேண்டிக்கொண்டேன்.அன்றோ அல்லது அதற்க்கு அடுத்த நாளோ என் MD யை அழைத்தபோது ஷீர்டி போய்விட்டு வந்து கொண்டிருப்பதாக  கூறினார்.நான் பேசிமுடித்த பின்னர்"அடடா இவரிடமாவது சாய்பாபாவின் படத்தை வாங்கிவர சொல்லியிருக்கலாமே"என்று நினைத்து வருத்தப்பட்டுகொண்டேன்.பின்னர் இரண்டுநாள் கழித்து மீண்டும் சாய்பாபாவின் படம்வைத்து அலங்கரித்தவண்டி ஒன்றுவந்து எங்கள்வீட்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்தது,அப்போதுகூட அவரைபோய் பார்த்து தொழுதுவிட்டுவரலாம்,இதென்ன வீம்பான மனம் என நினைத்தேன், ஆனாலும் போகவில்லை.பிறகு இதுகுறித்த சிறுஉறுத்தல் இருந்துகொண்டே இருந்தது.
             சென்ற வெள்ளிகிழமை வேறு ஒரு வேலையாக MD வீட்டிற்கு சென்றிருந்தேன் அந்த வேலைமுடிந்து கிளம்பும்போது,அவர் வீட்டிற்கு உள்ளே அழைத்து சென்றார் "ஏன்டா உனக்கு சாய்பாபா சிலை வேணுமின்னா எங்கிட்டதானே நீ கேட்கணும், அவன்கிட்டே போய் கேட்டிருக்கே என்றார். (அவர் குறிப்பிட்டது இதற்கு முன்பு ஷீர்டி நண்பரை பற்றி ) "இல்லீங்க சார் நான் எதுவும் அவர்கிட்ட கேட்கல ,சில நேரத்தில் பாபா பற்றி பேசியிருக்கிறேன் அவ்ளோதான்" என்றேன் (உண்மையில் நான் அந்த நண்பரிடம் பாபாவின் சிலையையோ போட்டோவையோ கூட கேட்கவில்லை) "நீ கேட்கலையா, கேட்டமாதிரி இருந்ததே" என்று சொல்லிக்கொண்டே சிறிய செவ்வகபெட்டியை கொடுத்தார்.

                                               

            அதை திறந்துபார்த்தபோது உள்ளங்கை அளவுக்கு வெண்மையான 
"ஷீர்டிசாய்பாபாவின்" சிலை உள்ளே இருந்தது.எனக்குவந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை,உலகில் எங்கோ சிறுமூலையில் இருக்கும் பக்தனின் கோரிக்கையை ஏற்றுகொண்டு அவன் வீடு தேடிவந்த மகானின் கருணையை என்னென்று சொல்லுவேன்.
என் வீட்டு பூஜையறையில் அந்த சிலையை வைக்கும்போது சத்யசாய்பாபா-வை வணங்கி "சொன்னதை செய்து விட்டீர்கள்நன்றி ,நீங்கள் என்னை பக்தனாக ஏற்றுகொண்டதற்கு அடையாளத்தை காட்டிவிட்டீர்கள் நன்றி" என்று சொல்லி சத்யசாய்பாபா,ஷீர்டிசாய்பாபா இருவரையும் வணங்கினேன்.இனி என் பிரச்சனைகள் கண்டிப்பாக தீரும் என நம்புகிறேன் "சாய்பாபாவின் கருணைக்கு எல்லை ஏது", "பாபா வீட்டிற்கு வந்துவிட்டார்"  


                                  (அவர் பாதங்கள் )

No comments:

Post a Comment