Saturday 6 April 2013

உயிர் நண்பன்

                                                            உயிர் நண்பன் 
 


                     வேலை முடிந்து கிளம்பும்போது  செல்போன் ரிங்கடித்தது .. பார்த்தால் "ப்ரைவேட் நம்பர்" என செல்போன் திரை காட்டியது ...ஹலோ என்றேன் ...டேய் மச்சான், நான் வினோத் பேசறேன் ,எங்க இருக்க...டேய் நீயாடா எப்ப கலிபோர்னியாவுல இருந்து வந்த ,உனக்கு என்கேஜ்மென்ட்  அடுத்தமாசம்தானே ....சும்மா ,ஒரு சேஞ்சுக்கு கல்யாணமே சூசைட்தாண்டா, அதான் அதுக்கு முன்னாடியே நம்ம பசங்க எல்லாரையும் பார்த்துரலாம்ன்னு வந்தேன் ,அப்புறம் எங்கேயும் நகரமுடியாது ,அதான் உடனே வந்துட்டேன் ,சரிடா குப்பண்ணா பிரியாணி கடைக்கு 8 மணிக்கு வந்துடு,  வெயிட் பண்றேன் ,கொஞ்சம் கதை நிறைய பிரியாணி ....சரிடா என்றேன் ..அவனுக்கு குப்பண்ணா பிரியாணி ரொம்ப  பிடிக்கும்,கலிபோர்னியாவுக்கு போனதுக்கு அப்புறம் இப்பதான் முதல்தடவை வர்றான் .
             7.45 க்கு குப்பண்ணாவுக்கு சென்றேன் அவன் எனக்கு முன்பே காத்திருந்தான் ...கொஞ்சம் டல்லடித்திருந்தான்... ஏன்டா  டல்லா இருக்கே என்றேன் ,மொதல்ல ஆர்டர் பண்ணு என்றான் ...பிரியாணி ,வஞ்சிரம் மீன் உள்ளே போனதும் மெதுவாக பேச ஆரம்பித்தான் "இங்க வேற கல்யாணம் பிக்ஸ் பண்றாங்க ,அங்க ஒரு மேட்டர்ல சிக்கிட்டேன் அதுல இருந்து வெளிய வர்றது  ரொம்ப கஷ்டம் ,அதுனால ஒரு முடிவு பண்ணிட்டேன் " என்ன பிரச்னை .....ப்ச் ,சொல்லி சரி பண்ற நிலைமைய தாண்டிடிச்சு ,விட்ரு ...சரி விடு ,சரியாகிடும் நாங்கெல்லாம் இருக்கோம்ல ..."நீங்க இருந்து என்ன பண்ணுவீங்க ,போடா" ,அந்த பிரச்சனைய தீர்க்க முடியாது ,நான் பார்த்துக்குறேன்" அவன்  சகஜமாக கொஞ்சநேரம் ஆனது  ,டின்னர் முடிஞ்சு  கொஞ்சம் கவலையுடன்  என்னை திரும்பி பார்த்தபடியே போனான் .
                வீட்டுக்கு போய் கட்டிலில் விழுந்தேன்  நல்லதூக்கம் ...காலையில அம்மா பதட்டமா  எழுப்பினாங்க ..டேய் டிவிய பாருடா ...பிளாஷ் நியூஸில் "கலிபோர்னியாவில் இந்திய இளைஞர் தற்கொலை" ..."50-வது மாடியில் இருந்து குதித்தார்,பெயர் வினோத், வயது 26, ஈரோட்டை சேர்ந்தவர் "ன்னு புதியதலைமுறையில் தகவல் சொன்னார்கள் அதில் அவர்கள் காட்டிய போட்டோவில் இருந்தது வினோத் ..என்னால் நம்ப முடியவில்லை...என் போனை எடுத்து பார்த்தேன் அதில் கால் ரெஜிஸ்டரில் அந்த பிரைவேட் நம்பர் மட்டும் இல்லை ...திடீரென போன் ரிங்கடித்தது,,, " foreign number " எடுத்தேன் ....
லண்டனில் இருந்து எங்க கிளாஸ்மேட்  மகேஷ் பேசினான் ..
            "டேய் கார்த்தி .. வினோத் வந்திருக்கான்டா பேசுறியா"
       எனக்கு தொண்டை வறண்டு மயக்கம் வந்துகொண்டிருக்கிறது !





No comments:

Post a Comment