Tuesday 30 April 2013

ஆக்சிடெண்ட்

                                                        ஆக்சிடெண்ட் 

              இன்று மதியம் சுமார் 12 மணிக்கு என் அலுவலகத்தின் முன்னால் பஸ்சும் இண்டிகா காரும் கிராஸ் செய்தன ..பெரும் சத்தம் ....கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பஸ்ஸின் பக்கவாட்டில் பட்டு இண்டிகா கார் அந்தரத்தில் ஒருசுற்று (தலை குப்புற அல்ல ) பக்கவாட்டில் சுற்றி கீழே விழுந்தது ...உடனே நான் எந்திரித்து காருக்கு ஓடினேன் ....கார் முன்புறம் நன்றாக நசுங்கி விட்டது..இடித்த பேருந்து சிறிதுதூரம் தள்ளி நின்றுவிட்டது ,, ...டிரைவர் சீட்டில் இருந்தவர் தலை மற்றும் கையில்  ரத்த காயத்துடன் வண்டியில் இருந்து வெளிவர முயற்சி செய்தார் ..காருக்குள் இருந்து ஒரு பெண்ணின் கூக்குரல் தன் மகன் நிலை அறிய ....பின்னால் இரண்டு சிறுவர்களின் அழுகை சத்தம் வேறு ...நான் முன்பக்க கதவை திறந்து அவர் வெளிவர  உதவினேன் ....பின்பக்க கதவை திறக்க முடியவில்லை  ....என் உடன் பணிபுரிபவர்கள் பின் பக்க கதவை திறந்து விட்டனர் ...உள்ளே இரண்டு சிறுவர்கள் ,தாய் .......,,வண்டியை ஒட்டி வந்தது தந்தை ...இரண்டு சிறுவர்களில் ஒருவனுக்கு பெரிதாக அடி இல்லை,இன்னொருவனுக்கு கையில் அடி ..தோள்பட்டை விலகியிருக்கலாம் .... வேறு உயிர்ச்சேதம் இல்லை ...அவர்களை காரிலிருந்து வெளிலே கூட்டி வந்து எங்கள் அலுவலக வாசற்படியில் உட்கார வைத்தோம்...
அதற்குள் கூட்டம் கூடி விட்டது சுமார் 20 பேருக்கு மேல் சேர்ந்து விட்டனர்....நான் அலுவலகத்திற்கு  உள்ளே ஓடி வந்து 108-ஐ அழைத்தேன் ..விவரம் சொன்னேன் ..விவரங்கள் கேட்டு காத்திருக்க சொன்னார்கள் ...வெளியே நின்றவர்களும் 108-க்கு அழைத்தனர் ...அதே நேரம் என் மொபைலில் அருகிலுள்ள போலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை  அழைத்தேன் ...என்னை போலீஸ் ஸ்டேசனில் தெரியும் என்பதால் போனை எடுத்தவுடன் "சார் தகவல் தெரியும் ,போலிஸ் வந்துக்கிட்டிருக்கு" என்றார் ...அதே நேரம் காத்திருப்புக்கு பின் "சார் அந்த ஏரியாவில் உள்ள ஆம்புலன்ஸ் வெளியே சென்றுள்ளது அங்குவர முக்கால் மணி நேரம் ஆகும் ,என்ன செய்யலாம்" என என்னிடம் கேட்டார், மறுமுனையில் கால்சென்டர் பணியாளருடன் குறிப்பிட்ட ஆம்புலன்சின் டிரைவரும் கான்பிரன்சில் இருந்தார் ... கிட்டதட்ட 5 நிமிடத்தில் போலீசும் வந்து விட்டார்கள்  ...நான் உடனே "சரி போலீஸ் வந்து விட்டது அவர்களை வைத்து வேறு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொள்கிறேன்" என்று சொல்லி வைத்துவிட்டேன்...
நான் போலீஸ்காரரிடம் சென்று (தெரிந்தவர்) "108 கிடைக்கவில்லை வேறு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யுங்கள் "என்றேன் ..அதே நேரத்தில் அடிபட்டவர்களுக்கு என் ஆபிசில் இருந்து தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி கொண்டிருந்தார்கள் ...வேறு ஆம்புலன்ஸ் உடனே கிடைக்கவில்லை ....கிட்டத்தட்ட 20 நிமிடம் ஆன பிறகு ஆம்புலன்ஸ் வந்தது ...அப்போது அந்த காரில் வந்த பெண்மணியின்  (தலையில் லேசான அடி ) போனை வாங்கி அவர் உறவினர்களுக்கு தகவல் சொல்ல முயற்சித்து கொண்டிருந்தார் ..ஆனால் அவர் தம்பியே போனை எடுக்கவில்லை ,,,முதலில் அடிபட்ட பெண்மணியின் கணவர் ,குழந்தைகள் இருவரையும் ஆம்புலன்சில் ஏற்றிவிட்டு GH க்கு புறப்பட்டது ஆம்புலன்ஸ் ..பெண்மணியின் உறவினர்களுக்கு போன் செய்ய முயற்சி செய்தவர் அவருடைய காரில் பெண்மணியை GH -க்கு அழைத்து சொல்வதாக சொன்னார் ...காரில் இருந்த அவர்களின் உடமைகளை எல்லாம் எங்கள் அலுவலகத்திற்குள் கொண்டு வந்து வைத்துவிட்டோம் ....அந்த பெண்மணியை உள்ளே அழைத்து வந்து முகத்தை கழுவி துடைக்க உதவினோம் ...பின்னர் அவர் சொன்ன இன்னொரு நம்பரை டயல் செய்து கொடுத்தேன் .,..மறுமுனையில் (இன்னொரு தம்பி போல )போனை எடுத்தார் ...பெண்மணி போனை வாங்கி அழுது கொண்டே பேசினார் ,,பிறகு நண்பர் ஒருவர் போனை வாங்கி விவரத்தை  அவர் தம்பியிடம் சொல்லி பயப்பட ஒன்றும் இல்லை நீங்கள் கிளம்பி வந்தால் போதும் என்றார் ...பிறகு அந்த பெண்மணி தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு மற்றவற்றை எங்கள் அலுவலகத்திலேயே வைத்துவிட்டு  எங்களுக்கு நன்றி சொல்லிவிட்டு GH -க்கு கிளம்பினார்...அவர்கள் இருவரும் சித்த மருத்துவ டாக்டர்களாம் ,கோவையிலிருந்து தேனி நோக்கி செல்லும்போது நடந்த விபத்து இது...தவறு இருபுறத்திலும் உள்ளது ....

பிறகு போலீஸ்காரர்  வந்து "கிரேன் வருவதற்குள் யாராவது வந்து கார் பேட்டரியை கழட்டிக்கொண்டு போய் விடப்போகிறார்கள் பார்த்து கொள்ளுங்கள் (!!!!) ,நாங்கள் சொல்லாமல் அவர்களின் பொருட்களை யாரிடமும் கொடுக்காதீர்கள்" என்று சொல்லிவிட்டு போனார் ..
பிறகு மதியம்  பஸ் மேனேஜர் வந்து என்னிடம் விவரம் சேகரித்தார் ...அவர் உறவினர் ஒருவரும் வந்து விட்டார் .அவர் ஆக்சிடெண்ட் ,அவர்களின் நிலை குறித்த தகவல்களை என்னிடம் கேட்டு தெரிந்துகொண்டார் ......பின்னர் போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று போலீஸை உடன் அழைத்து வந்து பொருட்களை பெற்றுக்கொண்டார்..
அவர் அந்த பெண்மணிக்கு போன் போட்டு என்னிடம்  கொடுத்தார் "ரொம்ப நன்றி சார் எங்களுக்கு உதவினதுக்கு என்றார் ,உங்கள் விசிட்டிங் கார்டை கொடுத்து விடுங்கள்" என்று கூறினார் ,"பரவாயில்லங்க" என்றேன் நான் ,, அவர் உறவினரிடம் என் விசிட்டிங் கார்டையும் கொடுத்துவிட்டேன்... அவர்கள் கோவை PSG -ல் அட்மிட் செய்யப்பட்டுள்ளார்கள் பயமில்லை  எனவும் தெரிந்து கொண்டேன் ....


இந்த சம்பவம் எனக்கு கொடுத்த அனுபவங்கள்  :-

"தேவையற்ற வேகமும் , கவனக்குறைவும் வாழ்க்கையை புரட்டி போட்டுவிடும்"

 ஒரு விபத்து நடந்தால் உடனே ஒன்று சேர்ந்து அவர்களை காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள் ...அடுத்தகட்ட நடவடிக்கையும் என்னவென தெரிகிறது ...மக்களுக்கு "ஹேட்ஸ் ஆப் "...

இன்று விபத்து நடந்த இடத்துக்கு உடனே வந்த போலீசின் வேகமும் ,நடவடிக்கைகளும் நன்றாக இருந்தது.

ஒரு சிலர் சில குறிப்பிட்ட நம்பரில் இருந்து போன் வந்தால் போனை எடுக்காமல் இருப்பதும் ,புது நம்பர் அழைப்பை எடுக்காமல் இருப்பதும் தவறு.
முடிந்தளவுக்கு போனை அட்டெண்ட் செய்யுங்கள் ..அவர் மொக்கை போடுபவர் ,அல்லது தேவையில்லாதவராக இருந்தால் விஷயம் மட்டும் கேட்டு எதோ காரணம் சொல்லி  போன் கட் செய்யலாம் ,.ஆனால் எப்போதும் போன் அட்டெண்ட் செய்யாமல் இருக்க வேண்டாம்.அது  அவரின் உயிர் காக்கும் "Call" ஆக கூட இருக்கலாம்.

வழியில் போகிறவர் கூட தன்  பிரச்னையாக நினைத்து வந்து உதவி செய்கிற
நிலை இன்னமும் தமிழ்நாட்டில் இருக்கிறது  ...

என்னளவில் பதட்டப்படாமல் என்னாலான உதவிகளை அவர்களுக்கு செய்தேன் ...இதில் என்  பொதுநலத்தோடு கொஞ்சம் சுயநலமும் உள்ளது ...நான் இங்கு மனைவி குழந்தையுடன் வசிக்கிறேன் ..அங்கு ஈரோட்டில் வசித்துவரும் என் தாய்,தந்தைக்கு  இதுபோல் ஏதேனும் அவசரஉதவி தேவையெனில் அவர்களுக்கு  ஒருவர் இதுபோல் பார்த்து உதவிசெய்வார் என்ற நம்பிக்கை  உள்ளது ....எல்லாவற்றிக்கும் மேலாக" கடவுள் இருக்கிறார்  அவர் ஆபத்து காலத்தில் ஒருவரை கண்டிப்பாக கைவிட மாட்டார்"
என நம்புகிறேன் "தெய்வம் மனுஷ ரூபேனா "


2 comments:

  1. அருமை. வாழ்த்துகள்!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் சார் :)))

      Delete